பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் சார்பில் பட்ஜெட் வீடு கண்காட்சி: வர்த்தக மையத்தில் 2 நாள் நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை மக்களுக்காக குறைந்த விலை வீடுகள் கண்காட்சியை பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் நிறுவனம் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் மார்ச் 14, 15-ல் (இன்றும், நாளையும்) நடத்துகிறது.

இந்நிறுவனம் இதற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தியிருந்தாலும், இது குறைந்த விலை வீடுகளுக்கான பிரத்தியேகக் கண்காட்சி எனலாம்.

இதில் 100-க்கும் மேற்பட்ட பிரபல பில்டர்கள், ஃப்ளாட் புரமோட்டர்கள் பங்கேற்கின்றனர். அபார்ட்மென்ட், தனி வீடு, வில்லா ஆகியவற்றுடன் மனைப் பிரிவுகளும் இடம்பெறுகின்றன.

கண்காட்சி குறித்து பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் நிர்வாக இயக்குநர் ஏ.உதயகுமார் கூறும்போது, ‘‘சென்னை மக்களுக்கு அபார்ட்மென்ட் வீடுதான் வரப்பிரசாதம்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி முழுவதும் உள்ள வீடு, ஃப்ளாட், வில்லா ஆகியவற்றை ஒரே இடத்தில் பார்வையிட்டு, தங்களது எளிய பட்ஜெட்டுக்கு ஏற்ப தேர்வு செய்ய நடுத்தர மக்களுக்கு இது நல்ல வாய்ப்பு. கண்காட்சியில் ஆந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பிஎன்பி ஹவுசிங், டிஹெச்எப்எல், ஐடிபிஐ ஆகிய வங்கிகள் வீட்டு வசதிக் கடன்களை உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 நாள் கண்காட்சியின்போது அடுக்குமாடி குடியிருப்பு புக்கிங் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள பெட்ரூம் செட் பர்னிச்சர் இலவசமாக வழங்கப்படும்’’ என்றார்.

இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள் ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்