வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் இணைந்து தொடங்கியுள்ள வல்லூர் அனல் மின் நிலையம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது.

வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.கடந்த மாதம் 25ம் தேதி நள்ளிரவு 3ம் அலகில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், 3ம் அலகில் உள்ள கொதிகலனில் கடந்த 13ம் தேதி ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த பழுதை நீக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பழுது சரிசெய்யப்பட்டதை அடுத்து, 3வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

வல்லூர் அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளிலும் தற்போது மின் உற்பத்தி தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்