இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான பாடல்களின் திருட்டு சிடிகள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தாணு மற்றும் நிர்வாகிகள் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று பிற்பகலில் வந்து, திருட்டு சிடி தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.
முழு உரிமை உள்ளது
அந்த புகாரில், ‘இசை யமைப்பாளர் இளைய ராஜாவின் இசையில் உருவான பாடல்களின் முழு உரிமையும் அவரிடம்தான் உள்ளன.
ஆனால் அவரது அனுமதி இல்லாமல் பலர் பாடல்களை சிடியாக தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிடிக் கடைகளில் இளையராஜாவின் பாடல்கள் திருட்டு சிடியாக விற்பனை செய்யப்படுகின்றன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
11 mins ago
கல்வி
6 mins ago
இந்தியா
34 mins ago
கருத்துப் பேழை
44 mins ago
தமிழகம்
21 mins ago
தொழில்நுட்பம்
27 mins ago
கருத்துப் பேழை
50 mins ago
கருத்துப் பேழை
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago