இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அகஸ்டின், மாரிச்செல்வம், செல்வம், பாண்டி, மாணிக்கம், பூரணம், முனியசாமி ஆகிய 7 மீனவர்களும் கோடியக்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த 7 பேரும் பாம்பன், ராமேஸ்வரம், தங்கச்சிமடம், திணைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மீன்பிடித்த பின்னர் அதிகாலை கரை திரும்பும் போது, அவர்களை இலங்கை மீனவர்கள் சிறைபிடித்தனர்.சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க 2 லட்சம் ரூபாய் கேட்டு படகு உரிமையாளர்களுக்கு நிபந்தனை விதித்தனர்.
இந்நிலையில், சுமார், 2 மணி அளவில், தமிழக மீனவர்களின் மீன்களையும், வலைகளையும் பறித்துக்கொண்டு மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை இலங்கை மீனவர்கள் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
சினிமா
58 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago