இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுவிப்பு

By செய்திப்பிரிவு

இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அகஸ்டின், மாரிச்செல்வம், செல்வம், பாண்டி, மாணிக்கம், பூரணம், முனியசாமி ஆகிய 7 மீனவர்களும் கோடியக்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த 7 பேரும் பாம்பன், ராமேஸ்வரம், தங்கச்சிமடம், திணைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

மீன்பிடித்த பின்னர் அதிகாலை கரை திரும்பும் போது, அவர்களை இலங்கை மீனவர்கள் சிறைபிடித்தனர்.சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க 2 லட்சம் ரூபாய் கேட்டு படகு உரிமையாளர்களுக்கு நிபந்தனை விதித்தனர்.

இந்நிலையில், சுமார், 2 மணி அளவில், தமிழக மீனவர்களின் மீன்களையும், வலைகளையும் பறித்துக்கொண்டு மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை இலங்கை மீனவர்கள் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்