கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று பெட் ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மூவாயிரத் துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடிக்க புதன் கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்கள் வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண் டிருந்தனர்.
அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிக்கக் கூடாது என எச் சரித்துள்ளனர். மேலும் பெட் ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரது விசைப்படகு தீப்பற்றியது. இதைத் தொடர்ந்து படகில் இருந்த மீனவர்கள் கடல் நீரைக் கொண்டு தீயை அணைத்தனர். இதனால், உயிருக்குப் பயந்து போன ராமேசுவரம் மீனவர்கள் உடனே கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து ஆரோக்கியதாஸ் ராமேசு வரம் மீன்வளத்துறை அலுவல கத்தில் புகார் அளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
உலகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
வேலை வாய்ப்பு
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago