ஊரக வளர்ச்சி துறை பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

By செய்திப்பிரிவு

ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு நடத் தினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில், துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குநர் கே.பாஸ்கரன் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் (மகளிர் திட்டம், புதுவாழ்வு) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்), முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு, ‘தானே’ வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

22 mins ago

விளையாட்டு

45 mins ago

வணிகம்

57 mins ago

இந்தியா

59 mins ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்