தமிழக அரசு பணியில் 183 தோட்டக்கலை அலுவலர் காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 16.3.2014 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) எழுத்துத் தேர்வை நடத்தியது.
இந்த நிலையில், எழுத்துத் தேர்வின் முடிவு நேற்று வெளியிடப் பட்டது. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அலுவலக தகவல் பலகையிலும், அதன் இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 30-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. இதுகுறித்த தகவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் நேர்முகத்தேர்வு நடைபெறும். நேர்காணலுக்கு ஒரு காலியிடத்துக்கு 2 பேர் அல்லது 3 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என்று டிஎன்பிஎஸ்சி செயலர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago