டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் ‘மனிதநேயம்’ பயிற்சி நிலையத்தில் பயின்ற 5 மாணவிகள் முதல் 5 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கு உதவும் நோக்கில் ‘மனிதநேய அறக்கட் டளை’யை சைதை துரைசாமி 2005-ல் தொடங்கினார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான மத்திய சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் தமிழகத்தின் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விரும்புபவர் களுக்கு ‘மனிதநேயம்’ இலவசக் கல்வியகம் கடந்த 7 ஆண்டு களாக இலவசப் பயிற்சி அளித்து வருகிறது. இதில் பயின்று இது வரை 2169 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று தேசிய, மாநில அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் திங்கள்கிழமை நடந்தது. இதில், மொத்தம் உள்ள 25 காலிப் பணி யிடங்களில் ‘மனிதநேயம்’ மாணவிகள் நெய்வேலி டீனாகுமாரி, சென்னை அசோக் நகர் கீதாப் பிரியா, எர்ணாகுளம் ரேஷ்மி, கரூர் பூங்குழலி, நாமக்கல் மைதிலி ஆகியோர் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர்.
அவர்களுக்கு மனிதநேய அறக் கட்டளைத் தலைவரும் சென்னை மேயருமான சைதை துரைசாமி, நிர்வாகிகள் மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இத்தகவலை இம்மையத்தின் மாநில போட்டித் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago