மனைவியின் கருவை கட்டாயமாக கலைக்க முயன்ற குற்றத்துக்காக கணவர், மாமனார், மாமியார் ஆகி யோருக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை அருகேயுள்ள வேளச்சேரியைச் சேர்ந்தவர் ராஜமகாலிங்கம் (வயது 37). இவர் ஏற்கெனவே இரு பெண்களை மணந் துள்ளார். மூன்றாவதாக மணி மேகலை என்பவரை மணந்தார். அவர் 5 மாத கர்ப்பமாக இருந்த போது கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்துள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் கருவுற்றார். அந்த கருவையும் கலைக்க முயற் சித்தார். அதற்கு மணிமேகலையின் மாமியார் தனலட்சுமியும், மாமனார் பால்ராஜும் உடந்தையாக இருந் துள்ளனர்.
இதுகுறித்து கிண்டி மகளிர் காவல்நிலையத்தில் மணிமேகலை புகார் செய்தார். சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மீனா சதீஷ் இவ்வழக்கை நேற்று விசாரித்து, மனைவியின் கருவைக் கலைக்க முயன்ற குற்றத்துக்காக கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும், மாமனார், மாமியார் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
43 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago