கிரானைட் முறைகேடு விவகாரம்: 8-ம் கட்ட விசாரணை தொடங்கியது

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக சட்ட ஆணையர் சகாயம் 8-ம் கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளார்.

இதில் கப்பல் போக்குவரத்துத் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, வணிக வரித்துறை, கால்நடை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அளிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், துறைக்கு ஏற்ற வகையில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான பதில்களை அறிக்கையாக தயார் செய்து ஞாயிற்றுக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சகாயம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று தொடங்கிய 8-ம் கட்ட ஆய்வு மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெறப்பட்ட வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குவாரிகளில் நடைபெற்ற சந்தேக மரணங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

54 mins ago

வர்த்தக உலகம்

58 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்