இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் மோடி உறுதி: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

By செய்திப்பிரிவு

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகவுள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியா வரவுள்ளார். இதற்கு தமிழகத்தில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இது தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும். இது நல்ல விஷயமல்ல.

மேலும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகவுள்ளார். பாஜகவும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. இலங்கை அதிபரின் இந்திய வருகை இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும். இதனால் அங்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

46 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

3 hours ago

மேலும்