தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இது குறித்து தமிழ்நாடு வனத்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் வனத்துறை மற்றும் வனக் கழகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 200 வனவர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 மையங்களில் நடைபெறுகிறது. முதல் தாள் (பொது அறிவு) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், 2-ம் தாள் (பொது அறிவியல்) பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
இத்தேர்வில் பங்கேற்க 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் www.forests.tn.nic.in மற்றும் http://forest.examsonline.co.in ஆகிய வனத்துறை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago