போதை பொருள் வைத்திருந்த கானா நாட்டு இளைஞரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸுக்கு கிடைத்த தகவலின் பேரில், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஓர் அறையில் இருந்த வெளிநாட்டு இளைஞரின் உடைமைகளை சோதனை செய்தபோது, ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோகைன் என்ற போதைப் பொருள் இருப்பது தெரிந்தது. அவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கானா நாட்டை சேர்ந்த குவோமி எபினேசர்(33) என்பதும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக இந்த போதைப் பொருளை கொண்டு வந்தார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago