தமிழகத்தில் 1 கோடியே 67 லட்சம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளது என சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ரூ.486 கோடி செலவில் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டன. தமிழக அரசு சார்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்ற டிசம்பர் 31-ம் தேதி பச்சைநிற குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது கடந்த ஒன்றரை மாதத்தில் இலவச வேட்டி, சேலை பெற தகுதியுள்ள 1 கோடியே 67 லட்சம் ஆண்களுக்கும், 1 கோடியே 67 லட்சம் பெண்களுக்கும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 97 சதவீதம் பேர் இத்திட்டத்தால் பயனடைந்து உள்ளனர்.
பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வேட்டி, சேலைகள் அந்தந்த மாவட்டங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலகமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
36 secs ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
43 mins ago
உலகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago