போராட்டத்தைக் கைவிட சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்குச் செல்லுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டக் கல்லூரியை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களை சந்தித்துப் பேசினார்.

''சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யாமல் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்துகிறேன். நீதிமன்றம் அருகே கல்லூரி இருந்தால் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி போராடும். போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்குச் செல்லுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்'' என ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்