மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக மாநிலங்களவை உறுப்பி னரும், கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவருமான கனிமொழி, தனது 47-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி சிஐடி காலனி இல்லத்தில் ஏராளமான திமுகவினர் குவிந்திருந்தனர்.
திமுக தலைவரும் கனிமொழியின் தந்தையுமான கருணாநிதி, காலை 10.30 மணியளவில் வந்தார். அப்போது கனிமொழி, பிறந்த நாள் கேக் வெட்டி கருணாநிதிக்கு ஊட்டினார். பின்னர் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இதையடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கனிமொழி வீட்டுக்கு வந்து அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், முன்னாள் மாநில அமைச்சர்கள் செல்வராஜ், பூங்கோதை, முன்னாள் எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோரும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிறப்பு ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
திமுக பொதுக்குழுவில் கனிமொழிக்கு மகளிரணிச் செயலாளர் அல்லது மாணவரணி செயலாளர் பொறுப்பில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகவே, அந்த பிரிவுகளைச் சார்ந்த ஏராளமானோர் கனிமொழியை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 mins ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
49 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago