கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு: கடலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

கூடங்குளத்தில் 3,4-வது அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து இடிந்தகரையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பொது மக்கள் கடலில் இறங்கி போராட்டத் தில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் முதலாவது அணு உலையில் வணிகரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியிருக்கிறது. 2-வது அணுஉலையில் விரைவில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்தப் படவுள்ளது. இங்கு 3, 4-வது அணுஉலைகள் அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இதற்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்ட குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில், இடிந்தகரை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு திருப்பலிக்குப்பின் போராட்ட குழுவினரும், இடிந்த கரை பகுதி மீனவர்கள், பெண்கள், சிறுவர்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரைக்கு ஊர்வல மாக வந்தனர். அதிகாலை 1.30 மணியளவில் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அணு உலைகளை மூடக்கோரி கோஷ மிட்டனர். போராட்டக் குழு ஒருங் கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், மை.பா.ஜேசுராஜ், முகிலன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுசெயலர் தியாகு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

மேலும்