உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் வைகுண்டராஜனும், அவரது சகோதரர் ஜெகதீசனும் நேற்று சரண் அடைந்தனர். அவர்களுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
தூத்துக்குடி துறைமுக கழகத் தலைவராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவர் சொத்து குவிக்க உதவி செய்ததாக விவி மினரல்ஸ் பங்குதாரர்களான வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். சுப்பையா தற்போது மேற்கு வங்கத்தில் பணிபுரிகிறார்.
இந்த வழக்கில் வைகுண்டராஜன், ஜெகதீசன் இருவருக்கும், உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. இருவரும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்து தலா ரூ.5 லட்சத்துக்கான உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்து ஜாமீன் பெறலாம். பின்னர், 4 வாரங்களுக்கு சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவு சிபிஐ ஆய்வாளர் முன்பு ஆஜராகி தினமும் காலை 10.30, மாலை 6.30 மணிக்கு இருவரும் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கக் கூடாது. தலைமறைவாகக் கூடாது என நீதிபதி அப்போது நிபந்தனை விதித்தார். அதன்படி வைகுண்டராஜன், ஜெகதீசன் இருவரும் நேற்று மதுரை சிபிஐ நீதிபதி எம்.எம்.கிருஷ்ணன் முன்பு சரண் அடைந்தனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
விளையாட்டு
34 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
58 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago