பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னையில் எழுத்தாளர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

'மாதொருபாகன்' நாவலுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் எதிரொலியாக, 'தமிழ் இலக்கிய எழுத்துப் பணியில் இருந்து முற்றிலும் விலகுகிறேன்' என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்தார்.

இந்நிலையில், பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

''எழுத்துரிமை, கருத்துரிமை பறிக்கும் செயலில் இந்து அமைப்புகள் ஈடுபடுகின்றன. 'மாதொருபாகன்' புத்தகத்தை திரும்பப் பெறக் கூறி ஆசிரியரை மிரட்டி இருக்கின்றன'' என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 mins ago

சினிமா

8 mins ago

சினிமா

13 mins ago

இந்தியா

21 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்