சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
'மாதொருபாகன்' நாவலுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் எதிரொலியாக, 'தமிழ் இலக்கிய எழுத்துப் பணியில் இருந்து முற்றிலும் விலகுகிறேன்' என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்தார்.
இந்நிலையில், பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
''எழுத்துரிமை, கருத்துரிமை பறிக்கும் செயலில் இந்து அமைப்புகள் ஈடுபடுகின்றன. 'மாதொருபாகன்' புத்தகத்தை திரும்பப் பெறக் கூறி ஆசிரியரை மிரட்டி இருக்கின்றன'' என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 mins ago
சினிமா
8 mins ago
சினிமா
13 mins ago
இந்தியா
21 mins ago
க்ரைம்
18 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
46 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago