கச்சத்தீவில் பிப்ரவரி 28-ல் புனித அந்தோனியார் திருவிழா

By எஸ்.முஹம்மது ராஃபி

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி 28ல் கொடியேற்றத்துடன் துவங்கி மார்ச் 01 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளன.

285 ஏக்கரிலான கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந் தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.

கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்துக் காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் 1913-ம் ஆண்டில் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை நிறுவினார்.

அன்றிலிருந்து இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் எல்லைக்குள்பட்ட கச்சத்தீவு இலங்கை ஒப்பந்தம் மூலம் 1974ஆம் ஆண்டு இந்தியாவால் தாரை வார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக பல ஆண்டுகள் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா நடைபெறாமல் இருந்தது. பின்னர் 2010ம் ஆண்டு முதல், இந்திய-இலங்கை அரசுகளின் அனுமதியுடன் தொடர்ச்சியாக கச்சத்தீவு திருவிழா நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலிருந்து கச்சத்தீவு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் ராமேசுவரம் பங்குத்தந்தை சகாயராஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது,

2015–ம் ஆண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி மாதம் 28ம் தேதி துவங்கிய மார்ச் 1 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளன. பிப்ரவரி 28 அன்று காலை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும். திங்கட்கிழமை இரவு தேர்பவனியும் அடுத்த நாளான மார்ச் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும். பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும்.

கச்சத்தீவு திருவிழாவிற்கு பக்தர்கள் கலந்து கொள்ள ராமேசுவரத்திலிருந்து படகுகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. கச்சத்தீவு செல்ல படகுகளின் பதிவையும், பயணிகளின் பதிவையும் செய்ய விரும்புபவர்கள் ராமேசுவரம் வேர்க்கோடு தேவாலாயத்தில் மட்டும் பதிவு செய்ய வேண்டும். ஒரு படகில் படகின் சிப்பந்திகள் உள்பட அதிகப்பட்சமாக 40 பேர்கள் வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகப்பட்சமாக ரூ.1000 வரையிலும் மட்டும் பயணத் தொகையாக வசூலிக்க வேண்டும் என படகுகளின் உரிமைகயாளர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மூன்று பாஸ்போர்ட் அளவுப் புகைப்படங்களுடன், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து தரவேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தர கடைசி நாள் பிப்ரவரி 20 ஆகும்.. படகுகளில் பக்தர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படும், என்றார்.

கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ளும் இந்திய-இலங்கை இருநாட்டு பக்தர்களும் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் மற்றும் நெடுந்தீவு மறைமாவட்ட ஆயர் நேசநாயகன் ஆகியோர் செய்து வருகிறனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

11 mins ago

சுற்றுச்சூழல்

21 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

16 mins ago

விளையாட்டு

37 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்