சென்னை: மூளைச்சாவு இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

By செய்திப்பிரிவு

மூளைச்சாவு அடைந்த தனியார் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ஆரணியைச் சேர்ந்த 37 வயது இளைஞர் ஒருவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மூளையில் ரத்தக் கசிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மேல் சிகிச்சைக்காக கடந்த 21-ம் தேதி போரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது.

அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் குழுவினர் நேற்று அறுவைச் சிகிச்சை மூலம் மூளைச்சாவு அடைந்த அந்த நபரின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் கண்களை எடுத்தனர்.

பின்னர், இவை சென்னை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த குறிப்பிட்ட நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. கண்கள் மட்டும் கண் மருத்துவமனை ஒன்றுக்கு அளிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

10 mins ago

இந்தியா

18 mins ago

க்ரைம்

15 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்