சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிலிண்டர் மானியத்துக்கு பெயர் பதிய 6 இடங்களில் நாளை சிறப்பு முகாம்

By செய்திப்பிரிவு

காஸ் சிலிண்டருக்கு நேரடி மானியம் பெற, வாடிக்கையாளர்கள் பெயர் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6 இடங்களில் நாளை நடக்கிறது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:

காஸ் சிலிண்டருக்கு நேரடி மானியம் பெற, வாடிக்கையா ளர்கள் தங்களது பெயரை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை (14-ம் தேதி) நடத்தப்படுகிறது. நுங்கம் பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன அலுவலகம், அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள மாநகராட்சிப் பள்ளி விளையாட்டுத் திடல், வியாசர்பாடி எம்கேபி நகர் மேற்கு அவென்யூவில் உள்ள குரு சந்திர மாளிகை, சிட்லபாக்கத்தில் உள்ள சமுதாயக் கூடம், புழுதி வாக்கத்தில் உள்ள சுமங்கலி திருமண மண்டபம், திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில் பெயரை பதிவு செய்ய வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை 2 நகல்கள், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் (பாஸ் புக்) முதல் பக்க நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் சமீபத்தில் சிலிண்டர் வாங்கப்பட்டதற்கான பில் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் ஐஎப்எஸ் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக மேலும் சந்தேகங்கள் இருந்தால், முகாமில் பங்கேற்கும் அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஐஓசி செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் ஐஎப்எஸ் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்