கொடுங்கையூரில் மனைவியிடம் செயின் பறிக்கப்பட்ட அதிர்ச்சியில் கணவர் பரிதாபமாக இறந்தார்.
சென்னை கொடுங்கையூர் காந்திநகர் 5-வது தெருவில் வசிப்பவர் குருசாமி(61). வீட்டருகே மளிகை கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி மனோரஞ்சிதம்(54). குருசாமிக்கு இரு நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போகவே அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் மளிகை கடை வியாபாரத்தை மனோரஞ்சிதம் கவனித்தார்.
7 சவரன் செயின்
நேற்று முன்தினம் மாலையில் மளிகை கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் மனோரஞ்சிதம் அணிந்திருந்த 7 சவரன் செயினை திடீரென பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். மனோரஞ்சிதம் அபயக்குரல் எழுப்பியும் அந்த நபரை பிடிக்க யாரும் முயற்சி செய்ய வில்லை.
அன்று இரவில் கணவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த மனோரஞ்சிதம், செயின் பறிபோன சம்பவத்தை அவரிடம் கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குருசாமி சில நிமிடங்களில் இறந்துவிட்டார். செயின் பறிப்பு சம்பவம் ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
30 mins ago
வணிகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago