டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் வழக்கறிஞர் சரண்

By செய்திப்பிரிவு

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் சரணடைந்தார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை யில் நரம்பியல் மருத்துவராக பணி புரிந்தவர் டாக்டர் சுப்பையா. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் நிலத்தகராறு காரண மாக 2013-ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பாசில் என்ற வழக்கறிஞர், அவரது சகோதரர் போரிஸ், இவர்களின் பெற்றோர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை திட்டத்தை தயார் செய்து கொடுத்ததாக திருநெல்வேலி இஎஸ்ஐ மருத்துவமனை டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கொலை செய்ததாக ஜேம்ஸின் உதவியாளர்கள் முருகன், அய்யப்பன், செல்வபிரகாஷ் ஆகிய 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் வில்லியம்ஸ் என்ற வழக்கறிஞரை போலீஸார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த வில்லியம்ஸுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜ் என்பவரை போலீஸார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். வில்லியம்ஸ் இருக்கும் இடம் குறித்து ஜேசுராஜிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வில்லியம்ஸ் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

34 mins ago

உலகம்

49 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்