முன்னாள் அமைச்சர் நேரு மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

By செய்திப்பிரிவு

திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த திமுக பிரமுகர் குத்தாலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கல்யாணத்தை சந்திக்கச் சென்றபோது முன் னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருவாரூர் மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணன் மற்றும் திமுகவினர் அங்கு பணி யில் இருந்த சிறைக்காவலர் வீரமணி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காரை ஏற்றிக் கொல்ல முயன்றதாகவும் அளித்த புகாரின்பேரில் கே.கே. நகர் போலீஸார் 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட திமுக செயலர் கே.என்.நேரு, திருவாரூர் மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணன் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் நடந்து வரு கிறது. நேற்று இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்காக கே.என்.நேரு, கலை வாணன், அன்பழகன் உட்பட 11 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நேரு தரப்பினர் மீதான குற்றச்சாட்டு விவரம் நீதிமன்றத்தில் வாசிக்கப் பட்டது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை ஜன. 20ம் தேதி நடைபெறும் என அறிவித்து வழக்கை நீதிபதி ஒத்திவைத் தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

விளையாட்டு

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்