மதுரை கிரானைட் முறைகேடுகள் குறித்து மதுரை மாவட்டம் புதுதாமரைப் பட்டியில் சகாயம் நேற்று விசாரணை நடத்தினர்.
அவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ரவி மனைவி உஷா என்பவர் கூறியதாவது: 2008 ஆக. 8-ம் தேதி மாலை வீட்டு முன் விளையாடிய எனது மூன்றரை வயது மகள் கோபிகா காணவில்லை.
மறுநாள் காலை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், கிரானைட் குவாரிக்கு அருகே கழுத்து அறுபட்ட நிலையில் எனது மகள் இறந்து கிடந்தார். அதுபற்றி ஊர்க்காரர் கள் விசாரித்துவிட்டு, கிரானைட் நிறுவனத்தினர் எனது மகளை கடத்திச் சென்று நரபலி கொடுத்ததாகக் கூறினர்.
அப்போதே காவல்துறையில் புகார் செய்தோம். ஆனால் போலீஸார் முறையாக விசாரணை நடத்தவில்லை. எனது மகளை கொன்றவர்களை தண்டிக்க வேண்டும் என்றார். உரிய விசாரணைக்கு காவல்துறையிடம் வலியுறுத்தப்படும் என்றார் சகாயம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
55 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago