பாகிஸ்தானில் பள்ளி மீது தாக்குதல்: ஆற்காடு நவாப் கண்டனம்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஆற்காடு நவாப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வன்முறைகளால் உலகை ஆள நினைப் பவர் உயிர்வாழ முடியாது. குழந்தைகளை தாக்குவதன் மூலம் நாகரீக கோட்பாடுகளின் அனைத்து எல்லைகளையும் அவர்கள் மீறியுள்ளனர். மனிதாபிமானத்துக்கு எதிரான இந்த குற்றங்களை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

பாகிஸ்தானில் குழந்தைகளைக் கொன்று குவித்த செயலை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தீவிரவாத செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற அமைப்புகளை ஒழிப்பதற்காக மற்ற நாடுகளை ஐ.நா. சபை ஒருங்கிணைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

ஜோதிடம்

7 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்