ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்கு தமாகா(மூ) தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மதுரை, அலங்காநல்லூர், தேனி, காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பொங்கல் நேரத்தில் நடத்தப்படும் இந்த விழா தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் பாரம்பரியமாகும். இதைக் காண வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

இத்தகைய பாரம்பரியமிக்க விளையாட்டுக்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இந்த விளையாட்டை தொடர வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கருத்தாகவுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பாதிப்பு ஏற்படாமலும், இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தும் நீதிமன்றத்தில் உரிய உத்தரவை வாங்கி, இந்த போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

56 mins ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்