சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்:
''வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் வெப்பச்சலனம காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 1 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்''.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
க்ரைம்
15 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
39 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
4 hours ago