சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 2 நாட்களுக்கு லேசான மழை: வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்:

''வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் வெப்பச்சலனம காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 1 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்''.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

க்ரைம்

15 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

39 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்