அதிமுகவுக்கு டிடிவி தினகரன் சரியான தலைமையாக இருப்பார் என்பதை, மதுரை மேலூர் பொதுக்கூட்டம் வெளிப்படுத்தியுள்ளதாக கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகர் கருணாஸ், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கோவை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுகவின் அணிகள் இணைய வேண்டுமென்பதே எனது விருப்பம். அக்கட்சியின் அணிகள் தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து, அதிமுக ஆட்சி தொடர ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழகத்துக்கும், அதிமுக கட்சிக்கும் இரண்டு முதலமைச்சர்களை அடையாளம் காட்டியவர் சசிகலாதான்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தேர்வு செல்லாது எனக் கூறப்படுவது. இது அவர்களது உட்கட்சி விவகாரம். ஆனால், அந்த கட்சிக்கு தினகரன் சரியான தலைமையாக இருப்பார் என்பதை, மதுரை மேலூர் பொதுக்கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது. தினகரனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தால் அவரை நான் நேரில் சந்திப்பேன்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அதிமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கருத்தைக் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது கண்டனத்துக்கு உரியது என்று கருணாஸ் கூறினார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago