கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எஸ்.ஐ. பெருமாள்சாமி தலைமையிலான போலீஸார், அண்ணா பஸ் நிலையத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அங்கு சந்தேகப்படும் விதத்தில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் கள்ள நோட்டுகளும், கலர் பிரின்டர்களும் இருந்தன. அவர்கள் தென்காசி சுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்த அசன் (65), சாத்தூர் மேலசாந்தி நகரைச் சேர்ந்த சதுரகிரி (73), திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த லூர்துசாமி (65) எனத் தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் மந்தித்தோப்பு, துளசி நகரைச் சேர்ந்த மகேஸ்குமார் (28), இந்திரா காலனியை சேர்ந்த மணிகண்டன் (33), கயத்தாறை அடுத்த சவலாப்பேரியைச் சேர்ந்த கருப்பசாமி (45) ஆகியோரும் சிக்கினர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார், அவர்கள் 6 பேரையும் கைது செய்து ரூ. 7.23 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் மற்றும் பிரின்டர்களை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago