இரட்டை இலை சின்னத்தை மீட்பதும், பிளவுபட்ட அதிமுகவை இணைப்பதும் தீராத பிரச்சினை என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருவாரூரில் இன்று செய்தியாளர்களிடம் திவாகரன் கூறுகையில், ''நேற்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த அரசு அறுதிப் பெரும்பான்மையை அதீதமாக இழந்திருக்கிறது. ஏன் இன்னும் ஆளுநர் காலம் கடத்துகிறார் என்று தெரியவில்லை. முதல்வரையும், ஊழல் கறை படிந்த அமைச்சரவையயும் மாற்ற வேண்டும். இதை எதுவுமே செய்யாமல் ஆளுநர் காலம் கடத்துவது ஏன் என்று தெரியவில்லை. இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் இரட்டை இலை சின்னத்தை மீட்பதும், பிளவுபட்ட அதிமுகவை இணைப்பதும் தீராத பிரச்சினைதான்'' என்று திவாகரன் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago