மக்கள் நலக்கூட்டணி சார்பில் சேலம் போஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, “திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் நடக்காது என்று ஸ்டாலின் சொல் கிறார். ஆனால், கருணாநிதியின் மனைவி, மகள், பேரன் ஆகி யோர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அதிமுக தலைமை மீது வழக்கு உள்ளது. இன்னொருவர், நான் முதல்வரானால், முதல் கையெழுத்து மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்கிறார்.
ஆனால், மத்திய அமைச்ச ராக இருந்தபோது போட்ட முதல் கையெழுத்து, அவரது தலை யெழுத்தை மாற்றிவிட்டது. மக்கள் நலக்கூட்டணியில் இருக் கும் எங்கள் மீது யாராவது ஊழல் புகார் தெரிவிக்க முடி யுமா?” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, “மக்கள் நலக்கூட் டணி அடுத்த தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் இனி ஒரு கட்சி ஆட்சி இருக்கக்கூடாது. முதல்வராகும் தகுதி வைகோ, ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோருக்கு இல்லையா?” என்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரும் கூட்டத்தில் பேசினர். முன்னதாக அரூரில் நடந்த கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பேசினார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
19 mins ago
இந்தியா
13 mins ago
தமிழகம்
30 mins ago
வாழ்வியல்
21 mins ago
இந்தியா
35 mins ago
தமிழகம்
56 mins ago
சினிமா
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago