சித்தி மீது போலீஸ் நடவடிக்கை கோரி நடிகை அஞ்சலி வழக்கு

By செய்திப்பிரிவு

தனது சித்திக்கு எதிராக தான் அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி நடிகை அஞ்சலி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் எனது சித்தியுடன் தங்கியிருந்த நான் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஐதராபாத்தில் தங்கியுள்ளேன். சென்னை வளசரவாக்கத்தில் எனக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை எனது சித்தி பாரதி தேவியும், சித்தப்பாவும் அபகரித்துக் கொண்டனர். தற்போது அந்த வீட்டுக்கு என்னால் செல்ல இயலவில்லை. எனது நகைகள் மற்றும் உடைமைகளை அவர்கள் எடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து எனது சித்தி, சித்தப்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையினரிடம் புகார் அளித்தேன். எனினும் எனது புகார் தொடர்பாக காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆகவே, எனது புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் நடிகை அஞ்சலி கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்