புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மீண்டும் குலக்கல்வி திட்டம் வந்துவிடும்: விஜயதரணி

By செய்திப்பிரிவு

புதிய கல்விக் கொள்கை ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின்படி உள்ளது. அதனை ஏற்றால், மீண்டும் குலக்கல்வி திட்டம் வந்துவிடும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் விஜயதரணி கூறுகையில், ''புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வர மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முன்வடிவு மிகவும் அபாயகரமானதாக உள்ளது.

புதிய கல்விக் கொள்கை ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின்படி உள்ளது. அதனை ஏற்றால், மீண்டும் குலக்கல்வி திட்டம் வந்துவிடும். மேலும், 4 மற்றும் 5-ம் வகுப்புகளில் தேர்ச்சிக்கான மதிப்பெண்களை பெறாதவர்களை தேர்ச்சியடையாதவர்கள் என்று அறிவிக்க புதியக் கல்விக்கொள்கை பரிந்துரைத்துள்ளது. இதனை ஏற்றால், இடைநிற்றல் அதிகரித்து விடும்.

எனவே, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என்று தமிழக அரசு அதிமுக எம்.பி.க்கள் மூலம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

கல்லூரி மாணவர்களுக்கு அளித்துள்ள கல்விக் கடனை மாநில அரசு ஏற்க வேண்டும்'' என்று விஜயதரணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்