அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற் கும், தற்போது முதல்வராக அவரை தேர்வு செய்ததற்கும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் போரூரைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் சுமார் 10 பேர் சசிகலாவை புகழ்ந்து பாடியபடி போயஸ் தோட்டத்துக்கு வந்தனர். அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், புகழ்ந்துதானே பாடுகிறார்கள் என்று நினைத்து சசிகலா வசிக்கும் வீட்டு முன்பு வரை அனுமதித்து விட்டனர்.
வீட்டு முன்பு சென்ற தொண்டர்கள், மறைத்து வைத்திருந்த சங்கை எடுத்து திடீரென ஊத ஆரம்பித்து விட்டனர். இரவில் 10 பேர் சேர்ந்து சங்கு ஊதியதால் அந்த இடமே பரபரப்பாகி விட்டது. அப்போது வீட்டுக்குள் இருந்த சசிகலா, சங்கு சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து பால்கனியில் வந்து நின்று பார்த்தார்.
இதை சற்றும் எதிர்பாராத போலீஸார், உடனடியாக 10 பேரையும் பிடித்து ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
28 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago