ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ஒரு நிமிடம் நின்று செல்லும்

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூர் - மதுரை - சென்னை எழும்பூர்

மார்க்கத்தில் ஓடும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (எண்: 12635), ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு மாலை 5.49 மணிக்கு வந்து, 5.50 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

மதுரை - சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் (எண்: 12636), ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு காலை 9.17 மணிக்கு வந்து, 9.18 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

கருத்துப் பேழை

24 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

8 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்