தேமுதிக தொழிற்சங்க பேரவை செயலாளர் நீக்கம்: விஜயகாந்த் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தேமுதிக தொழிற்சங்க பேரவை செயலாளர் கட்சியின் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கப்படுகிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடரபாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேமுதிக இணைப்பு அமைப்பான தேசிய முற்போக்கு தொழிற் சங்க பேரவை செயலாளர் எம்.சவுந்திரபாண்டியன் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் கட்சிக்கே களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டமையாலும், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் நடந்து கொண்டதால், அவர் வகித்து வந்த பேரவை தொழிற் சங்க செயலாளர் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்.

இவருடன் பேரவை தொழிற் சங்க நிர்வாகிகள், மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

தமிழகம்

16 mins ago

இணைப்பிதழ்கள்

33 mins ago

இணைப்பிதழ்கள்

44 mins ago

தமிழகம்

55 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்