வடசென்னை மக்கள் 40 ஆண்டுகளாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தொடங்கப்பட்ட ஸ்டான்லி ரயில்வே சுரங்கப்பாதை பணியை, 18 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து ஒரு வழியாக முடிந்துவிட்டது.
பல ஆண்டுகளாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே நடைபெற்று வந்த ரயில்வே சுரங்கப்பாதை பணி முடிந்து, 3 மாதங்களுக்கு மேலாகியும் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே எம்.சி. சாலையில், ரயில் பாதையை எளிதாக கடக்க, மாநகராட்சியும், ரயில்வே நிர்வாகமும் இணைந்து, ரூ.15.76 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 359 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலம் கொண்ட அந்தச் சுரங்கப்பாதை பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த அப்பணி, கடந்த 3 மாதங் களுக்கு முன் நிறைவுற்ற நிலையில், பயன்பாட்டுக்கு சுரங்கப்பாதை திறந்துவிடப்படவில்லை.
இதுகுறித்து, ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகை யில், “ராயபுரம், ஆர்.கே. நகர், தண்டையார்பேட்டை, திருவொற்றி யூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வடசென்னை வாசிகள் ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளுக்கு எம்.சி. சாலை ரயில்வே கேட்டை கடந்து செல்லவேண்டும். இல்லை என்றால், 2 கி.மீ. தூரம் சுற்றி, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் பாரிமுனை பகுதிகளுக்கு செல்லவேண்டும்.
எனவே, வடசென்னை மக்கள் 40 ஆண்டுகளாக வைத்த கோரிக் கையின் அடிப்படையில் தொடங் கப்பட்ட ஸ்டான்லி ரயில்வே சுரங்கப் பாதை பணியை, 18 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து ஒரு வழியாக முடிந்துவிட்டது.
ஆனால், பணி முடிந்து, 3 மாதங்களுக்கு மேலாகியும் சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப் படவில்லை” என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சுரங்கப் பாதை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது ஏற்பட்ட மண் சரிவு, சுரங்கப் பாதையில் தொடர்ந்து சுரந்த தண்ணீர், அவ்வப்போது பெய்த மழை உள்ளிட்ட பல காரணங்களால் பணி தாமதமானது.
தற்போது பணி முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், சுரங்கப் பாதையில் மழைக் காலத்தில் தேங்கும் நீரை வெளியேற்ற மோட்டார் பம்ப் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே, உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சுரங்கப் பாதையை திறந்துவிட முடியவில்லை. மோட்டார் பம்ப் அமைக்கும் பணி விரைவில் முடிந்துவிடும்.
அதன் பிறகு, வரும் ஜனவரி தொடக்கத்தில், சுரங்கப் பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட திறப்புவிழா நடைபெறும்” என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
39 mins ago
ஜோதிடம்
49 mins ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago