வெயிலின் தீவிரத்தை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு நேற்று பாக்கெட் மோர் வழங்கப்பட்டது. கோடைகாலம் முடியும் வரை போக்குவரத்து போலீஸாருக்கு தினமும் மோர் வழங்கப்பட உள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போக்குவரத்து போலீஸாரின் முக்கிய பணியாக உள்ளது. போக்குவரத்து போலீ ஸார் கோடைக் காலத்தில் கடும் வெயிலில் சாலைகளிலும், சாலை சந்திப்புகளிலும், நிழலுக்கு ஒதுங்கக் கூட இயலாத இடங்களில் நின்று பணிபுரிய வேண்டியுள்ளது.
இவர்களது சிரமத்தைக் குறைக் கும் வகையில், இவர்களுக்கு பணியில் இருக்கும் போது, காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை, உள்ள நேரத்தில், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை குளிர்பானம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் போக்குவரத்து போலீஸாருக்கு நேற்று முதல் பாக்கெட் மோர் வழங்கப்பட்டது. தொடர்ந்து 122 நாள் இவ்வாறு பாக்கெட் மோர் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நேற்று சென்னையில் உள்ள போக்குவரத்து போலீஸார் 2,500 பேருக்கு தலா 2 வீதம் 5 ஆயிரம் மோர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
களத்தில் பணி செய்யும் போக்குவரத்து போலீஸாருக்கு மோர் சீராக வழங்கப்படுகிறதா? என்பதை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங், இணை ஆணையர் பவானீஸ்வரி கண்காணித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago