பேசின் பிரிட்ஜ் மார்க்கத்தில் இன்றுமுதல் அக்டோபர் 7-ம் தேதி வரை மின் ரயில் சேவை மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே புதிய பாதை அமைப் பதற்கான இறுதிகட்ட பணிகள் நிறைவடைய உள்ளன. இந்த பணிகள் காரணமாக நாளை (இன்று) முதல் வரும் 7-ம் தேதி வரையில் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்பட வேண்டிய சில மின்சார ரயில்கள் கடற்கரையில் இருந்து இயக்கப்பட உள்ளன.

கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை (இன்று) காலையில் 9.50 மணி, சூலூர்பேட்டையில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரவேண்டிய மின்சார ரயில்கள் கடற்கரைக்கு செல்லும். இதேபோல், மூர்மார்க் கெட் வளாகத்தில் இருந்து இன்று காலை 10.25, 11.35, மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.

நாளை (இன்று) முதல் 7-ம் தேதி வரை மூர்மார்க்கெட் வளாகத் தில் இருந்து இரவு 9.45, இரவு 11.20 மணி, நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் கடற் கரையில் இருந்து இயக்கப்படும். சூலூர்பேட்டையில் இருந்து இரவு 9.40, கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரவேண்டிய மின்சார ரயில்கள் கடற்கரைக்கு இயக்கப்படும். மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்ல வேண்டிய மின்சார ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்