கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐஐடி வளாகத்தில் உள்ள ஐசிஎஸ்ஆர் 4 மாடி கட்டிடத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற் பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ராஜ்பவன், கிண்டி, சைதாப்பேட்டை, அசோக் நகர் உள் ளிட்ட இடங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்தன.
2 தீயணைப்பு அதிகாரி கள் தலைமையில் வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
இந்த தீ விபத்தால் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என என ஐஐடி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் சில ஆவணங்கள் மற்றும் மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானதாக ஐஐடி வட்டாரங்கள் தெரி வித்தன.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago