அமைச்சர்கள் அறையில் முதல்வர் பழனிசாமி படம்

By செய்திப்பிரிவு

தலைமைச் செயலகத்தில் 30 அமைச்சர்களின் அறையிலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் மட்டுமின்றி, தற்போதைய முதல்வர் கே.பழனிசாமியின் படமும் தற்போது வைக்கப் பட்டுள்ளது.

அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருப்பவர் களின் அறையில் முதல்வரின் படம் இருப் பது வழக்கம். திமுக ஆட்சியில் கருணாநிதி யின் புகைப்படமும், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் புகைப்படமும் இருந்தன. ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து, ஓ.பன் னீர்செல்வம் முதல்வரானார். பல்வேறு அரசி யல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், முதல்வராக கே.பழனிசாமி பொறுப் பேற்றார். ஆனாலும், கடந்த 2 நாட்களுக்கு முன்புவரை, முக்கிய அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் மட்டுமே இருந்தது.

அரசுத் துறை செயலர் அறைகளுக்கும்..

இந்நிலையில், 30 அமைச்சர்களின் அறையிலும் முதல்வர் கே.பழனிசாமியின் படம் நேற்று முன்தினம் மாட்டப்பட்டுள்ளது. அரசுத் துறை செயலர்களின் அறைக்கும் விரைவில் முதல்வர் படம் அனுப்பிவைக்கப்பட உள்ள தாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் தான் கே.பழனிசாமி முதல்வராக பொறுப் பேற்றார். தற்போது முதல்வர் என்ற வகை யில் அமைச்சர்கள் அறையில் அவரது படம் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

34 mins ago

கருத்துப் பேழை

18 mins ago

தமிழகம்

54 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்