தமிழகம், புதுச்சேரியில் கன மழை நீடிக்கும்

By செய்திப்பிரிவு

தென் கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை காலை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நகர்ந்தால் தென் தமிழகத்தில் தொடங்கி சென்னை வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் சனிக்கிழமை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருந்தது. இதுவும் மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 காற்றழுத்த தாழ்வு நிலையும் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்துக்கு குறிப்பாக தென் தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்கும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஓரிரு இடங்களில் லேசான தூறலும் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்தது. கிண்டி, போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. ராயப்பேட்டை, சேப்பாக்கம், அடையாறு, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் லேசான தூறல் பொழிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்