சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை அமைத்துதர வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அதற்காக அனைத்து மாவட்டங் களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். 'தமிழகத்தில் மோடி ஆட்சி, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை' என்ற அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பாஜகவில் 18002662020 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமும் உறுப்பினராகும் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.

இந்த திட்டம் ஆரம்பித்த சில நாட்களிலேயே தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் மிஸ்டு கால் கொடுத்துள்ளனர். தற்போது தமிழக பாஜகவில் 10 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அதனை ஒரு கோடியாக உயர்த்த திட்மிட்டு செயல்பட்டு வருகிறோம்.

மாற்றுக் கருத்து இருந்தாலும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு இருக்கை அமைத்துதர வேண்டும். இது சட்டப்பேரவைத் தலைவரின் கடமையும் கூட. குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. குஷ்புவை பாஜகவில் சேர்க்க நாங்கள் முயற்சித்ததாக கூறுவதில் உண்மையில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்