வருமான வரி வழக்கு: ஜெயலலிதா, சசிகலா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஏப்ரல் 3-ம் தேதி ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் ஏப்ரல் 3ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர குற்றவியல் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் (பொருளாதாரக் குற்ற வழக்குகள்) நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு அங்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையை 3 வார காலத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதற்கு வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மூத்த சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் கே.ராமசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, ஜெயலலிதா, சசிகலா இருவரும் ஏப்ரல் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முன்னதாக, கடந்த 1991 – 92 மற்றும் 1992 – 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீடுகள் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று கூறி, இந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பை வழங்க ஜனவரியில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஏப்ரல் 3-ம் தேதி ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

தமிழகம்

7 mins ago

தொழில்நுட்பம்

30 mins ago

சினிமா

48 mins ago

வாழ்வியல்

30 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

மேலும்