மதுரை மாவட்டம் வாடிபட்டியில் மதுரை-திண்டுக்கல் சாலையில் இளைஞர்கள் 50 பேர் மறியல் செய்தனர். இதனால், மதுரை-திண்டுக்கல், மதுரை-வாடிப்பட்டி, திண்டுக்கல்-வாடிப்பட்டி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் 25 இடங்களில் மறியல் நடைபெற்றது.
வேலூர் அண்ணா கலையரங் கம் அருகே முகநூல் மற்றும் ‘வாட்ஸ்அப்’ குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் 300-க்கும் மேற்பட்ட வர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். குடியாத்தத்தில் இளைஞர்கள் 250-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகே பல்வேறு தமிழ் அமைப்பு கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் 91 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை கொடிசியா, வ.உ.சி. பூங்கா என 2 இடங்களில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல் லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தளவாய்ப்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, "பீட்டா அமைப்பில் நடிகர், நடிகைகள் அறியாமையால் இணைந்து விட்டனர். இனி யாரும் பீட்டாவில் இணையக்கூடாது. பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்" என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியினர் பெத்த நாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில் திடலில் சில காளைகளை கொண்டு வந்து எருதாட்டத்தில் ஈடுபட்டதால், பதற்றம் நிலவியது. ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், காளைகளை அவிழ்த்துவிட்டதால் போலீஸார் தடியடி நடத்தினர்.
திருநெல்வேலி பாளையங் கோட்டை வ.உ.சி. திடலில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 7 மணிக்குப் பிறகும் போராட்டம் நீடித்தது. தூத்துக்குடியில் எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
46 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago