பார்வையற்றோர் சங்க நிறுவனர் எஸ்.எம்.ஏ.ஜின்னா காலமானார்

By செய்திப்பிரிவு

பார்வையற்றோரின் ஊன்றுகோலாகத் திகழ்ந்த இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தின் (ஐ.ஏ.பி.) நிறுவனர் எஸ்.எம்.ஏ. ஜின்னா வியாழக்கிழமை மதுரையில் காலமானார். அவருக்கு வயது 70.

வியாழக்கிழமை மதியம் மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். அவரது இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் மதுரை அல்அமீன் நகர் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

எஸ்.எம்.ஏ. ஜின்னாவின் முயற்சியால் மதுரை அருகே சுந்தர்ராஜன் பட்டியில் உலகத் தரத்தில் பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அவர் குடியரசுத் தலைவரின் விருது பெற்றவர். அவருக்கு மனைவி நயினம்மாள், மகன் அப்துல்ரஹீம், மகள் ரோஷன் பாத்திமா ஆகியோர் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்