தங்கம் பவுனுக்கு ரூ.216 உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 848-க்கு விற்பனை செய்யப்பட்டது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பு நீக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததால் தங்கத்தின் தேவையும் விலையும் குறைந்திருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் திருமண சீசன் விரைவில் தொடங்கவுள்ளதால் தங்கத்தின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்ததால் உள்ளூரிலும் அதன் விலை உயர்ந்தது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 848-க்கு விற்கப்பட்டது. 22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 731-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 704-க்கு விற்கப்பட்டது.

விலை உயர்வு பற்றி சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, பண்டிகை மற்றும் திருமண சீசன் தொடங்கியுள்ளதால் தேவை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.216 உயர்ந்துள்ளது’’என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இணைப்பிதழ்கள்

24 mins ago

தமிழகம்

34 mins ago

இணைப்பிதழ்கள்

51 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்