பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து நாளை (நவம்பர் 1) முதல் தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளபாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 1.11.2014 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் திருநெல்வேலி வட்டங்களிலுள்ள 18,090 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago